/

கவிதைமணி

கும்மிருட்டு மழை இரவில்
மரத்தின் இலைகள் 
தலை குளிக்கும்!
மனித தலைகள் 
குடை பிடிக்கும்!

மழை இரவில் 
குளிரடிக்கும்!
மனதுக்கு 
இதமளிக்கும்!

மழை இரவில் 
வானம் ஒலி ஒளி அமைத்து 
மழைத் தூவும்!
தவளைகள் தாளம் போட்டு 
வரவேற்கும்!

மாலையில் மஞ்சள் 
குளிக்கும் வான மகள் 
மழை இரவில்
தலை குளிப்பாள்!

மழை இரவில் 
வானம் அருவி போல 
நீர் கொடுக்கும்!
பூமி தாகம் எடுத்தவன் போல
நீர் குடிக்கும்!

- கு.முருகேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.