/

கவிதைமணி

செக்க சிவந்த வானம் கறுத்திருக்க
           செடிகொடிகள் சிலுசிலுவென காற்றுதர
           வெக்கையாய் சற்றே மாறிடத்தான்
           வெண்ணிலவு மேகத்தில் மறைந்தோட
    

           குக்கூ என்றேதான் குரல்கொடுத்திடும்
           குயில்கள் எல்லாம் மரத்தில் ஒதுங்கிட
           தெக்கத்தி காற்றும் இதமாய் வீசிட
           திடிரென்று மாறியதே மழைஇரவாய்
        

           மண்வாசனை காற்றில் மிதந்துவர
           மேகங்கள் எல்லாம் மாநாடு போட
           விண்மங்கை கருநிற ஆடைபூண
           விடியவிடிய இருந்த்தே மழைஇரவாய்

                - கவிஞர் கே. அசோகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.