/

கவிதைமணி

வெளியில் செல்ல முடியவில்லை ஆனால் 
வழிந்த மழைத் துளிகளை ரசித்து மகிழ்ந்தேன் !

வானில் இருந்து வரும் மழைத்துளிகள் 
வளம் செழிக்க பயிர் வளர உதவுகின்றன !

மழை பொய்த்தால் வறட்சி வரும் 
மழை பெய்தால் பூமி குளிரும் !

கடலில் இருந்து ஆவியாகப் பறந்து 
கடினப் பயணம் செய்து வானம் சென்று !

புறப்பட்ட பூமிக்கே வந்து விழுகின்றது 
புத்துணர்வு தருகின்றது பூமிப்பந்துக்கு !

நானும் அவளும் ஒரு நாள் ஒரு குடையில் 
நல்ல மழையில் நனைந்து   வந்தோம் !

பசுமரத்து ஆணியாகப் பதிந்த நினைவை 
பெய்த மழை நினைவூட்டி மகிழ்வித்தது !

இரவு மழையை வணிகர்கள் வாழ்த்துவார்கள் 
இரவில் வணிகம் செய்வதில்லை என்பதால் !

உழவனும் இரவு மழையையே விரும்புவான் 
உழவை பகலில் செய்திட வாய்ப்பாக இருக்கும் !  

இரவு மழை இதம் தரும் இனிமை தரும் 
இன்னல் மறந்து இன்புற உதவிடும் ! 

- கவிஞர் இரா .இரவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.