/

கவிதைமணி

1)

வானில் வானவேடிக்கை

மண்ணில் மழைத்தூறல்

இரவில் மின்வெட்டு

***

2)

மழையும் சுகம்
இரவும் சுகம்
இரண்டும் பக்கம்
இணைந்தால் 
இன்னும் சுகம்..
உயிர் காக்கும்
உயிர் நீரே
உணர்வாய் தழைத்து
உன்னதம் அளித்து
வளம் பெருக
வந்திட்டாய் ..
வாழ்வு சிறக்க
விவசாயம் வளர
மானுடம் மலர
மண்ணில் மோதி
மங்கல ஊற்றை
அளித்திட்டாய்..
கார் மேகமாய்
பவனி வந்து
கரடும் கமழ
வித்திட்டாய்..
நன்னீர் தந்து
நலமுடன் வாழ
வழி தரும்
மாரியே
நீ மாறாது
பருவத்தே
வருகை தந்திடுவாய்..
பன்னீருடன்
நாங்கள்....

- ப.க.நடராசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.