கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சட்டம்: பொன் . குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

இயற்றியவனையே
ஏமாற்றிய பெருமைக்குரியது
சட்டம்.

மக்களுக்கானது அல்ல
மக்களுக்கான சட்டம்.

சட்டத்திற்கு 
மனசாட்சி இல்லை.
சாட்சிகள் தேவை.

வழக்குரைஞர்களின்
வாதங்களுக்குப் பின்னும்
இருட்டாகவே இருக்கிறது
சட்டம்.

அரசியல்வாதிகளும்
ஆட்சியளர்களும்
தப்பித்துக் கொள்ள
சட்டத்தில் ஓட்டைகள்.

சட்டம்
தன் கடமையை
ஆற்ற விடுவதே இல்லை
அரசியல்.

நிரந்தர தீர்வுக்கு
திட்டமிடாத அரசு
அவ்வபோது பிறப்பிக்கிறது
அவசர சிகிச்சைப் போல
அவசர சட்டம்.

சிலருக்கு சாதகமாகவும்
பலருக்கு பாதகமாகவும்
இருக்கிறது சட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.