குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

எதிர்காலம்: மு.மணிமேகலை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

எண்ணற்றக்  கனவுகள்
ஏக்கப் பெருமூச்சு
வண்ணமாய் ஒருநாள் மலருமென
வாழ்வின் நம்பிக்கையே எதிர்காலம்!

கடந்த காலம் நடந்த பாதை
முட்களாக மலர்களாக!
நிகழ்கால நிகழ்வுகள்
நிலையறியாத் தடுமாற்றம்!

எதிர்காலக் கற்பனையோ
புதிரான மகிழ்வுடன்!
வளமான எதிர்காலம் என்ற
வாழ்த்தோடு நின்றிடாமல்
வலிமையான அடித்தளம் நாம்
அமைப்போமே நிகழ்காலத்தில்!

உழவை உயர்த்தி
தொழிலைப் போற்றி
உன்னதக்  கல்விச் சீரமைத்து
வளமைநிறை இயற்கை காத்து
முன்னோர் கூற்றை முறையாய்ப் பற்றி
நன்னெறி வழியில் நாடது செல்ல
எண்ணியக் கனவும் நனவாகிடுமே!

மனிதம் செழித்து மன்பதை சிறக்க
வழியும் பிறக்கும்! வாழ்ந்து உணர்வோம்!
எதிர்காலம் புதிரன்று !முழுமதி நிறைவாய் !               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.