சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

அஸ்வின் - பிரசன்னா உரையாடலில் வெளிப்பட்ட சர்ச்சையான கருத்து குறித்து...

News image
மோர்கல், துரந்தர், பிரசன்னா. - படங்கள்: பிடிஐ, ஜியோ ஸ்டூடியோஸ், அஸ்வின் யூடியூப்.
Updated On :24 பிப்ரவரி 2026, 10:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் வீரர் அஸ்வின் பயிற்சியாளர் பிடாக் எனும் பிரசன்னாவின் உரையாடலில் வெளிப்பட்ட சர்ச்சையான கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் துரந்தராக வேலைப் பார்த்தது யார் என்ற கேள்வி சமூக வலைதளத்தில் தீயாகப் பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்?

இந்நிலையில் பிடாக் அஸ்வின் உடனான யூடியூப்பில் பேசியிருப்பதாவது:

மார்க்ரம் முதல் ஓவர் வீசுகிறார். டாஸ் வென்று பேட்டிங்கே விளையாடாத தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் விளையாடுகிறார்கள். அப்படியென்றால் தளபதி விஜய் சொல்வதுபோல இதைச் சொல்லிக்கொடுத்தவன் உள்ளேயே ஒருத்தனாகவும் இருக்கலாம் அல்லது இந்தியாவில் இருக்கும் ஒருத்தனே உனக்கு ஆப்பு வைத்தாகவும் இருக்கலாம் என்பார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அஸ்வின், “டேய் என்ன சொல்ற நீ?” என்பார். அதற்கு பிடாக், “நான் சொல்லி முத்துவிட்டேன். புரிந்துகொண்டவன் பிஸ்தா” என்பார்.

பின்னர், அக்‌ஷர் படேல் தேர்வு செய்யாததும் வாஷிங்டன் சுந்தரைத் தேர்வு குறித்தும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை எடுத்த விதம் குறித்தும் பேசினார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பிரசன்னா யாரைக் குறிப்பிடுகிறார்?

இந்தியாவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தெறி படத்தில் இடைவேளைக் காட்சியில் வரும் வசனம் போல பிடாக் பேசியதால் அது ஒருவேளை அவரைப் பற்றிய பேச்சா என்றே தெரியாமல் அஸ்வின் குழம்பினார். அஸ்வின் மட்டுமல்லாமல், சமூக ஊடங்களே இது குறித்து பேசி வருகிறது.

சமீபத்தில் துரந்தர் எனும் படத்தில் ரன்வீர் பாகிஸ்தானுக்கு ஒற்றனாகச் சென்றிருப்பார். அதனால், தென்னாப்பிரிக்க அணிக்காக வேலைப் பார்த்தது யார்? இந்திய வீரர்களின் பலவீனங்களை யார் கூறியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.