சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

எதிர்காலம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

எதிர்காலம்   பற்றியொரு   சிந்தை   யின்றி            எச்சத்தார்   வாழவழி   செய்தி   டாமல்முதியோரின்   சொல்தன்னைச்   கேட்டி   டாமல்            முன்துவர்க்கும்   நெல்லியெனத்   தள்ளி   விட்டோம்கதியிழந்து   போயிடுவோம்   இயற்கை   தன்னைக்            காக்காமல்   விட்டுவிட்டால்    என்று   சொன்னால்மதியாலே    வென்றிடுவோம்   என்று   சொல்லி            மாற்றத்தால்   அழிவுதனை   வரவ  ழைத்தோம் !காற்றுதன்னை   மாசாக்கிப்   பூமி   தன்னை            கனலாக்கி   ஓசோனை   ஓட்டை   யாக்கிஆற்றினிலே   மணலெடுத்துக்   கழிவு   சேர்த்தே            ஆழ்துளையில்   நீரெடுத்து   காலி   செய்துநாற்றுநட்டு   முப்போகம்   விளைத்த   மண்ணை            நாகரிக   மோகத்தால்   மனைக   ளாக்கிநேற்றுவரை   தூய்மையாக   இருந்த   வற்றை            நேராகக்   கூற்றுவன்கை    கொடுத்து  விட்டோம் !அறிவியலில்   வளர்ந்தடுத்த   கோள்கள்   கண்டும்            அடுத்துள்ள   நாடுகளில்   பகைவ  ளர்த்தோம்வெறிகொண்டு   நமக்குள்ளே   சாதி   மதத்தால்            வேறாகி   உயிர்பலிகள்    நடத்து   கின்றோம்தறிகெட்ட   அரசியலார்   நாடு   தன்னைத்            தன்னலத்தால்   தமதாக்க    எதிர்த்தோம்  இல்லைநெறிமாறி   பண்பாடு   ஒழுக்கம்   மாறி            நேர்மைநீதி    பாழ்படவும்    பார்த்து   நின்றோம் !மரம்வைத்துப்   பலன்கனினை   நமக்க   ளித்த            மாண்பான    முன்னோர்கள்    வழியில்   நின்றேஅரம்போன்ற   கூரறிவில்   இயற்கை   காத்தே            அற்புதங்கள்    நிகழ்த்திட்ட    அறிவி   னோடேகரமழுக்கின்   அரசியலார்    பிடியி   ருந்து            காப்பாற்றி   நல்லவர்கை   நாட   ளித்துவரமாக   பெற்றே; நாம்   வாழ்ந்த   வாழ்வை            வழங்கிடுவோம்   வருங்கால    சந்த   திக்கே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.