பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

புதிய டைரி: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

நாள்காட்டித்   தாளொன்று  கிழிக்கு  முன்பு
            நல்லசெயல்   செய்தோமா  என்றே  நம்மின்
ஆள்காட்டி   விரலாலே   நெஞ்சைத்   தொட்டே
            அடுத்தவர்கள்   கேட்குமுன்பு  நாமே  கேட்டு
தாள்பதிக்கும்   இற்றையநாள்   பிறருக்   காகத்
            தன்னலமே   இல்லாமல்   செயலைச்  செய்ய
நீள்கின்ற   எண்ணத்தில்   உறுதி   யேற்று
            நிதம்செய்தால்   நம்பெயரைச்  சொல்லும்  ஞாலம் !

நல்லசெயல்  செய்ததனைக்   கல்வெட்   டாக
            நம்முன்னோர்   வைத்ததாலே   படிப்ப  வர்கள்
நல்லசெயல்   செய்தவரை   அறிவ   தோடு
            நற்செயல்கள்   புரிவதற்கும்   முனைவர்   அன்றோ
வல்லதொரு   வரலாற்றை   அறிவ   தற்கும்
            வடித்துவைத்த   கல்வெட்டு   உதவல்  போல
சொல்லெழுத்தால்   எழுதிவைத்த   நாள்கு   றிப்பும்
            சொல்லிவிடும்   முந்தையதைப்   பிற்றை  நாளில் !

நாட்குறிப்பு   ஏடுதனில்   நடந்த   வற்றை
            நாள்தோறும்   எழுதிவைத்தால்   வரலா   றாகும்
நாட்குறிப்பு   தவறுகளைச்   சுட்டிக்   காட்டி
            நடக்காமல்   திருத்திகொள   வழியு   மாகும்
நாட்டினுடை   வரலாற்றை   யுவான்சு   வானின்
            நாட்குறிப்பு   நமக்கிங்கே  அளித்த  போல
காட்டியது   ஆனந்த   ரங்க  பிள்ளை
            கரம்வடித்த   நாட்குறிப்பு   புதுவை   தன்னை !

(1)

நாட்குறிப்பு   எழுதுகின்ற   பழக்கந்   தன்னை
            நாம்பழக்கப்   படுத்திவிட்டால்   எழுதி   எழுதி
நாட்டுமக்கள்   போற்றுமெழுத்   தாள   ராக
            நாளைபல   குழந்தைகளும்   வருவா   ரன்றோ
வீட்டிற்குள்   அமர்ந்தெழுதும்   நாட்கு   றிப்போ
            விடியலினை   நாட்டிற்குத்   தரவும்   கூடும்
காட்டாக   வாழ்ந்தந்த   வாழ்க்கை   தன்னைக்
            காட்சியாக்கி   வடித்திடுவோம்   குறிப்பில்  நாளும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.