புதிய டைரி: கவிஞர் கே. அசோகன்.


புத்தாண்டு பிறக்கும் முன்பே
புத்தம்புது டைரியை ஏந்தி
பத்துமணி ஆனாலுமே அதனை
பக்குவமாய் பிரித்தே வைத்து
சொத்துபத்து கணக்கெ ல்லாம்
மொத்தமாய் குறித்தே வைத்து
பத்திரமாய் பெட்டகத்தில் அதனை
பாதுகாக்க நானே வைத்தேன்
ஒவ்வொரு தாட்களி லுமே
ஓராயிரம் என்றே வைத்து
செவ்விளநீர் விலையை கூட
செலவாக ஏற்றி வைத்தேன்
பவ்யமாய் பதுங்கி இருக்கும்
பசும்பொன் விவரம் சொன்னேன்
அவ்வையின் பாடல்கள் கூட
அறிவரையாய் பதிந்தும் விட்டேன்!
இளவரசியின் தோழியை போல
எவ்விடமும் எடுத்து சென்றேன்!
பளபள பளிச்சிடும் பக்கத்திலே
பதுக்கியதை சொல்லி வைத்தேன்
நலம்பயக்கும் நூல்கள் பற்றி
நான்கே வரிஎழுதி வைத்தேன்
செலவுகள் அதிகம் என்றே
சேமிப்பை உரக்க சொன்னேன்!
குறிப்புக ளெல்லாம் அழகாய்
குறித்த வைத்த டைரியில்
அறியாது செய்த தவறினை
அறியாமல் எழுதி வைக்க
குறிவைத்து கொண்டவ ளெடுத்து
வீறுகொண்ட வேங்கை போல
அரிவாள் ஏந்தும்காளி யானாள்!
அன்றே புது-டைரி மறந்தேனே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...