நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம்: பெருமழை விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

எனதன்பே!
உன் இதய அரியாசனத்தில்
வீற்றிருப்பது...
நான்தான்...
நான் மட்டும்தான்...
என்றறிந்த நொடியிலிருந்து...
இப் பூவுலகமே
புது சொர்க்கமாகிப் போனதடி!
சாதாரண மரங்கூட
கற்பகத் தருவாய்
காட்சியளிக்குதடி!
என் பிம்பத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடி...
திடீரென என்னைப்
பேரழகனாய்க் காட்டி...
ஆனந்த அதிர்ச்சியில்
என்னை ஆழ்த்தி விட்டதடி!
பூக்கள் அத்தனையும் 
புது வண்ணத்தில் மலர்ந்து
என்னைப் புரட்டிப் போடுதடி!
நேற்று வரை
சாதாரணமாகத் தெரிந்த டூ வீலர்...
இன்றோ...
ஏழு குதிரை பூட்டிய
எழில் தேராக...
இளவரசன் என்னை
சுமந்து வருகிறதடி!
உன் பார்வை அம்புகள்...
கர்ணனின் கழுத்தில் விழுந்த...
தர்ம தேவதை கை பட்ட 
மலர் மாலைகளாக 
என்னை மகிழ்விக்கிறதடி!
இது போதும் எனக்கு!
என் இதய தேவதையே!
எடப்பாடி போல...
எனக்கு இன்னொரு அரியாசனம்
தந்தால்கூட அது எனக்கு 
தேவையில்லை என் தங்கத் தாரகையே!
மூன்றாவது நபரின்
முணுமுணுப்பு இல்லாமல்...
இருப்போம் நாம் இருவரும்
ஒரே அரியாசனத்தில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.