நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம்:  பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அரியா சனங்கள்
அமர்வதற்கு
வாய்ப்பே தருவதில்லை
அரியாசனம்.

அமர்வர்கள்
நல்லவராவென 
அறிவதில்லை
அரியாசனம்.

அரியாசனத்தில்
அமர வைப்பவர்கள்
அரியா சனங்கள்.

அரியா சனங்களை
அலட்சியப்படுத்துகின்றன
அரியாசனங்கள்.

அரியாசனங்களுக்கு
ஆசைப் படுபவர்கள்
உடன் இருப்பவர்களையும்
உதற தயங்குவதில்லை.

அப்பன் மகனையும்
அண்ணன் தம்பியையும்
பிரித்தாளும் ஆற்றல் பெற்றது
அரியாசனம்.

இருப்பவரையும் நிரந்தரமாக
இருக்க  விடுவதில்லை
அரியாசனம்.

எல்லோரும் போட்டியிட்டாலும்
ஒருவரே அமரக்கூடியதாக உள்ளது
அரியாசனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.