நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கவிதைமணி

அரியாசனமா?!
அது எனக்கு வேண்டாம ப்பா!
சரியாசனம் 
தந்தாலே போதும ப்பா!
அரியாசனத்தில் 
அமரும் பல பேர்...
நிம்மதி கெட்டு
நீள் துயில் கெட்டு
அமைதி கெட்டு
ஆளுமை கெட்டு
சுற்றம் கெட்டு 
சுகங்கள் கெட்டு 
எல்லாம் கெட்டு 
அவர்களும் கெட்டு
விட்டால் போதுமென்று 
விழுந்தடித்து ஓடுவதை
சரித்திரம் நன்றாய்
பதிவில் வைக்கும்!
அரியாசனத்துக்கு ஆசைப்பட்டு
தனியாசனம் இழந்தோர் கதைகள்
பலவும் இந்தப் பாரினில் உண்டு!
வேண்டாம் நமக்கு எந்த ஆசனமும்!
பறவைகள் போல...
தடம் ஏதும் பதிக்காமல்...
பறந்து வாழ்ந்து 
முடிப்போம் பிறவியை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.