நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம் !  கவிஞர் இரா .இரவி !

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு 
உருக்குலைந்து வருவது வேதனை !
 
அரியாசன ஆசையில் மனிதன் இங்கே 
ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் !
 
அறம் மறந்து  அறிவிலி ஆகின்றான் 
ஆசைப் பிடித்து நாளும்  அலைகிறான்!
 
மனிதன் என்பதை மறந்து துளியும் 
மனிதாபிமானமின்றி மரமாகிறான்!
 
எப்படியும்  அரியாசனம் அமர்வதே 
எனது குறிக்கோள் என்று திரிகிறான் !
 
அரியாசனத்தில் அமர்ந்து முன்பு 
ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் !
 
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான் 
அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான் 

வாக்களித்த மக்களே வெறுக்கும்படி 
வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் !
 
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் 
அரியாசனம் துறந்த துறவி புத்தர் !
 
பேராசை பெரு நட்டம் என்று அன்றே
பெரியோர்கள் சொல்லி வைத்தனர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.