பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கொளுத்தும் வெயிலில்
கோடை மழை ஒரு வரம்
மனிதம் பொய்ப்பதால்
மழையும் பொய்க்கிறது,

வரங்களெல்லாம்
சாபங்களாய் மாறுகின்றன.
கொடுப்பதும் கெடுப்பதும்
மழை தான் எனில்
இந்த மழையினையே
அடுத்துக் கெடுப்பதும்
மனிதர்களே..........

நிழலுக்கும் வேர்க்கும்
கடும் வெயில்தான்,
மருந்துக்கும் மரத்தை
விட்டு வைக்காததால் தான்.

கானல் நீர் தான்
கண்களை ஏமாற்றும்
கண்முன்னேயே
இயற்கையை ஏமாற்றும்
மனிதர் தான்...

இருக்கின்ற அணைநீர்
ஆவியாகாமல் இருக்க,
பத்து இலட்சம் செலவில்
முந்நூறு தெர்மாகோல் அட்டைகள்
அணையை மூடக்கூடுமோ.....

பாவம் இயற்கை
பரிதாப மனிதர்கள்.....
இவர்களுக்குக்
கோடைமழை வேண்டுமோ
குதூகலிக்க.........!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.