பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கவிதைமணி

மேகத்தில் தாமியாய், 
மின்னலோ பூக்காதோ?
இடிகளும் அதைக்கண்டு-தன் 
இதழ்களால் சிரிக்காதோ? 

வானத்தின் கைபேசி, 
வங்கத்தின் அலையுடுத்தி, 
கோடை முகில் கடத்தாதோ?-மழை 
குறுஞ் செய்தி பொழியாதோ?

தூறலென முகநூலில், 
தூரிகையால்  கிறுக்கிவிட்டால், 
பூமியெங்கும் பகிரச்சொல்லி-அதை  
புல்லினங்கள் கேட்காதோ?

வானவில் தேவதையும், 
வருணனை காதலிக்க, 
கட்செவி அஞ்சல் கொண்டு-இனி 
காற்றினில் பறக்காதோ ?

புஞ்சையும் நஞ்சையுமே,
புதுமழை செயலிகளை,
பதிவிறக்கம் செய்யாதோ ?-அதை 
பசுமைகொண்டு களிக்காதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.