பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை : கே.நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

சாரல் மழை ....தூறல் மழை ...அடை மழை !அடை மொழி உனக்கு எதுவானாலும் மழை நீ எனக்கு ஒரு நன்கொடைதான்  எப்போதும்!கோடை வெயிலில் வாடும் இந்த மண்ணுக்கு ஒரு கொடை  மழையாய் நீ வரவேண்டும் மண்ணும் என் மனசும் குளிர ! வருவாயா நீ கோடை மழையே ?குடை துறந்து  உன் கொடையில் நான் என்னை  மறந்து துள்ளி விளையாட சீக்கிரமே வந்து விடு மழையே !அடை மழையாய் நீ என்  மண்ணை புரட்டி போட்ட சமயம் என்ன மழை ..என்ன மழை ...விடாமல் பேய்   மழை என  நான் உன்னை வசை பாடியது உண்மை ! இன்று சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில்  ஒரு சொட்டு மழைநீருக்கு காத்திருக்கும் பல உயிரில் நானும் ஒருவன் !நான் பாடிய வசைமொழி மறந்து மன்னிக்க வேண்டும் என்னை மழைத்  தோழி நீ   ! இசைக்க வேண்டும் ஒரு இனிய கீதம் நீ எனக்காக !இடி மழை மின்னலுடன் நீ ஆட வேண்டும் ஒரு அழகு நாட்டியம் என் மண்ணில் ...கோடையில் உன் இசை நாட்டியம் கட்டியம் கூற வேண்டும் ஒரு கோடை இசை விழாவுக்கே !தட்டாமல் நீ வரவேண்டும் கோடை மழையே ! கை தட்டி உன்னைஅரவணைக்க காத்திருக்கிறோம் நானும் என் மண்ணும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.