பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கைகோர்ப்போம்: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

ஒருகை ஓசை ஒலிப்பதில்லை –இங்கு
இருகையோசையை   எதிர் ப்பதில்லை
ஆயிரம் கைகள் கூடிவிட்டால் –அநீதி
அஞ்சாமல் எழுந்து நிற்பதில்லை.

கைகளின் சக்தி மகத்தானது-அது 
சாதி சமயக் குறியில் லாதது
உழைக்கும் கைகள் உறுதியானது –அது
உலகுக்கு குழைக்க மறுத்திடாதது   

நெசவாளர் குயவர் கூலியென – அதன்  
நிலையினைப் பிரித்திட வியலாதது
கைகளை உயர்த்திப் போராடுவோம் –உழவர்  
உரிமைக் குரலதை  ஒலித்திடுவோம்

இளைஞர் பெண்கள்  முதியவர் –என  
எல்லாரும் சேர்ந்தணி வகுத்திடுவோம்,
எங்கு நடந்தாலும் அநீதிதான்  – அதை  
எப்போது நடந்தாலும் கூடி எதிர்ப்போம்.

வல்லான் கொடியனைக் கண்டஞ்சிடோம்  –இனி  
வாய்பொத்தி கைகட்டி நின்றிடோம்
இளங்காளையர்  குழுவின்  தலைமையிலே-நாம் 
இழந்தன அனைத்தையும் மீட்டெடுப்போம் .  
காலமும் தூரமும் தடையன்று –அதனால்  
கடலோ கரையோ நடுத் தெருவோ
கணமே கூடுவோம் எதிர்த்திடுவோம்  –ஒரு
கடலென அலைபோல்   கைகோர்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.