எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக்கு கிறைத்தநீர்: கா. மகேந்திரபிரபு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நெல்லும் புல்லும் 
வயலின் விருந்தாளியாய் 
நல்ல குளிர்ச்சி காண 
பசுமையின் தாயகமாய்
நெல்லின் உயரம் வானைத்தொட
புன்னகைக்கும் புல்லின் பசுமை பெருகவே 
நெல்லின் தாகம் போக 
புல்லின் தாகம் தீருமே 
நெல்லின் வளர்ச்சி காண 
புல்லிற்கு வியப்பாய்த் தெரியமோ ?
வயலில் புல்லின் வளர்ச்சி கண்டு 
வம்பிழுக்கும் களைச்செடிகள் !
நெல்தரும் தண்ணீர் தானம் 
நெல்லின் பரிசு களைச்செடிகளுக்கு !
விவசாயி தருவான் களைக்கொல்லி
விதைக்குள்ளே மரத்தின் பிம்பம் 
வீதிக்கு வரும் நீரின் பலனாய் 
மண்ணில் விழுந்த விதை மரமாகி 
கண்ணால்  காண கனியாகி 
பண் பாடுதே இளநெஞ்சம் !
நெல்லுக்கு இறைத்த நீர் 
புல்லின் பசியை தீர்க்கட்டுமே !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.