திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக் கிறைத்தநீர்: கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நதிவழியே  நடந்தே வந்து
நாற்றங்கால் தவழ் வதற்கே
புதிதாய் பாய்ந்து வந்தாய்!
புத்துணர்வாய் நாற்றங் காலும்
சுதிமீட்டும் யாழினை போல
சுழன்றாடி காற்றிலே நடனமிட்டு
நதிநீரின் தழுவலுக்கு நயமாய்
நாளும் நன்றிதனை நவின்றனவே
சுந்தரதமிழில் சொல் விதைத்தே
சுவைபடவே அடுக்கி வைத்து
ந ந்தவன காற்றைப்  போல
நயமாய் மேடைதனில் பேசிடுவர்!
வெந்த்தைத் தின்பதற்கே வேகாத
வெயிலில் வாடுகின்ற உழவர்கள்
கந்தையை உடுத்திக் கொண்டு
கண்களால் வானத்தைப் பார்த்தே
கண்டிடுமோ நெல்லுக்கிறைக்க நீரென
பசுமையை மறந்து வைத்தோம்
பகலவனை கொதிக்க வைத்தோம்
கொசுவினை  வரவேற்றே தான்
கொள்ளை நோயை கொண்டிட்டோம்
பசும்புற்களை  நசுக்கியே விட்டு
பல-மனைகள் ஆக்கி வைத்தோம்!
விசும்பித்தான் புலம்பி நின்றே
வான்மழைக்கு ஏங்கி நின்றோம்
கொடிகளை களைந்தே விட்டு
கட்சிக்கொடிகள் ஏற்றி விட்டோம்
விடியலில் எழுந்தே விடாமல்
விழிப்புடனே போர்வை போர்த்தி
வக்கணையாய் உறங்கி விட்டு
எழுகதிரும் உச்சியில் நிற்கையில்
எழுந்தேதான் நெல்லுக்கு இறைத்திட
நீரினைத் தேடியே நிற்கலாமோ !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.