திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக் கிறைத்த நீர்:முத்துலெட்சுமி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

இறையோடு ஒட்டாத எதுவும் 
இதயத்தோடு ஒட்டுவதில்லை
மண்ணோடு ஒட்டாத எதுவும் 
மனதோடு ஒட்டுவதில்லை
விண் உயர பறக்கும் கழுகு
திண்ணையில் தானியம் கொரிக்கும் 
சிட்டுக்குருவி போல் வருமா...
சிறுகுடிசைதான் என் வீடு
அதுக்காக பெரிய சிறை
சுகம் தருமா ???
உச்சிமலை மேகங்கள்
தூரல்கள் போடும்
ஊசிஇலை காடு உயரவளரும்
அதில் கனி வருமா
எந்தன் பனை தென்னை போல வருமா...
தேனீர் கடையில் நண்பர்களோடு தாளம் 
தட்டி வாழ்ந்த வாழ்க்கையை மீறி ஏதும் இல்லையே...
கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு 
அதில் ஆயிரம் அர்த்தம் சொல்லும்
மையிட்ட மான்விழி கண்கள் இங்கு எங்கும் இல்லையே...
இதைலெல்லாம் இனி காண முடியுமா ???
கூந்தலில் பின்னிய மல்லிகை ..
சுருக்கு வைத்து கட்டிய சேலை...
பாவாடை தாவணி எல்லாம்
யாரேனும் இங்கு கட்டிவந்தால்
மனம் அப்படியே ஆடிப்போகின்றதே...
வாடிய பயிருக்கு ஏற்றம்
இறைத்தநீர்
வந்துவிழுவதுபோல
ஊர்நிணைவுகள் மூடி நனைக்குதே
உயிர்வேரில் பசுமை
நிறையுதே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.