நெல்லுக் கிறைத்த நீர்:முத்துலெட்சுமி


இறையோடு ஒட்டாத எதுவும்
இதயத்தோடு ஒட்டுவதில்லை
மண்ணோடு ஒட்டாத எதுவும்
மனதோடு ஒட்டுவதில்லை
விண் உயர பறக்கும் கழுகு
திண்ணையில் தானியம் கொரிக்கும்
சிட்டுக்குருவி போல் வருமா...
சிறுகுடிசைதான் என் வீடு
அதுக்காக பெரிய சிறை
சுகம் தருமா ???
உச்சிமலை மேகங்கள்
தூரல்கள் போடும்
ஊசிஇலை காடு உயரவளரும்
அதில் கனி வருமா
எந்தன் பனை தென்னை போல வருமா...
தேனீர் கடையில் நண்பர்களோடு தாளம்
தட்டி வாழ்ந்த வாழ்க்கையை மீறி ஏதும் இல்லையே...
கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு
அதில் ஆயிரம் அர்த்தம் சொல்லும்
மையிட்ட மான்விழி கண்கள் இங்கு எங்கும் இல்லையே...
இதைலெல்லாம் இனி காண முடியுமா ???
கூந்தலில் பின்னிய மல்லிகை ..
சுருக்கு வைத்து கட்டிய சேலை...
பாவாடை தாவணி எல்லாம்
யாரேனும் இங்கு கட்டிவந்தால்
மனம் அப்படியே ஆடிப்போகின்றதே...
வாடிய பயிருக்கு ஏற்றம்
இறைத்தநீர்
வந்துவிழுவதுபோல
ஊர்நிணைவுகள் மூடி நனைக்குதே
உயிர்வேரில் பசுமை
நிறையுதே...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...