தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல்  நிலவுஅந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை !சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும்  சுந்தரியின்   ஒளியை  சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் !வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும்வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் !வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம் வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் !இரவில் மட்டுமே  தெரியும் வான் நிலா பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் !முழு நிலவாய் என்றும் அழகாய்  ஒளிர்பவள் முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் !ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் !இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும் விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி !சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால் சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் !சிக்கி முக்கி  கற்கள் உரசினாள் தீ வரும் செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் !மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால் மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் !விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.