/

மனம் எனும் மாயப்பேய்: பூ. சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

‘மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்’
ஆன்றோர் அமுத மொழி
அனைவரும் உணர வேண்டும் !

மனமது சீர்குலைந்தால்
மக்கள் விரும்பும் அமைதி
மனங்களிலே வாழ்விலே
காணாமலே மறைந்துவிடும் !

மரக்கிளைக்குக் கிளைகுர
ங்கு மட்டுமா தாவும்
மனித மனமும் தாவும்
இனி தாவும் மனதை நிறுத்தி
அமைதி வாழ்வைக் காண்போம் !

மனம் எனும் மாயப்பேய்
மனிதனைப் பிடித்து விட்டால்
குதூகூலக் குடும்பமும்
குட்டிச்சுவராகி விடும் !

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
நம் மனம் சொல்லும் வழியிலே 
நல்ல மனித மனங்கள் வாழும்
தீய மனதால் மனித வாழ்வு வீழும் !

எண்ணத்தின் பிறப்பிடம் மனம்
ஓர் மனித மனதிலிருந்து
ஓராயிரம் எண்ணங்கள் உதயம்
மனம் வெறுமையாகும்போது
நின்று விடும் மனித இதயம் !

அன்பு மனம் அமைதியான
ஆறுபோல் வளைந்து ஓடும் !
கொதிக்கும் கொடூர எண்ணங்கள்
கொந்தளிக்கும் கடல் அலைகள் !

மனம் எனும் மாயப்பேயை
வீரம் எனும் வேப்பிலை
கொண்டு விரட்டி விட்டு
அமைதியான அன்பு வாழ்வை
இதயத்தில் குடிவைப்போம் !                                                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.