பொம்மைகள்: லூர்து எஸ் ராஜ்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

உணவின்றி வாடும் ஏழையைக் கண்டு ஒதுங்கிச் செல்பவன்உடையின்றி வாடி, வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும்உழல்பவனுக்கு உடையளிக்காதவன்; தாகம் தீர்க்க நீரளிக்காதவன்;உண்டுறங்கக் கூரையிலாதவர் வாழ வசிக்க வகை செய்யாதவன் .வலியவன் தன்னிலும் மெலியவனை தாக்கி வருத்தும்போதுவலியச்சென்று மெலியவனுக்கு உதவாதவன் ; வாயில்லா பூச்சிகள்கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும்போது , கிஞ்சித்தும் உதவாதவன் ;தட்டிக் கேட்காதவன் ; தாமரை இலைநீர் போல் சமூகத்தில் ஓட்டாதவன்.பெண்ணினம் துன்புறும்போது பெட்டைபோல் அகல்பவன் ; அவர்களைக்கண்ணெனப் போற்றிப் பாதுகாக்காதவன் ; கற்பெனும் திண்மை பெற்றபெண்ணைத் தூற்றி பெண்டாள எண்ணி, மாசறு பொன்னை மண்ணில் சாய்த்துமானபங்கம் செய்பவனை, உடன் கொதித்தெழுந்து தடுத்து நிறுத்தாதவன்.பிஞ்சுக் குழந்தைகளை கெடுக்க எண்ணும் ஆசிரியன்; எளியவர் உடமைமை காக்காத, களவாடும் காவலன்; போதகன் என்னும் போர்வையில் பாதகம் செய்பவன்;நீதியைக் காக்காத நீசன்; நேர்மை ஏற்காத தலைவன் ; உண்மையை மறைத்துபீதியை உண்டாக்கும் அரசு ; இவர் பின்னுள்ள பேரெல்லாம் பொம்மைகளே.பொம்மைக்கு உயிரில்லை; உண்மை பேச வாயில்லை; அநீதியைப் பார்த்துமது சும்மாவே இருக்கும் ; துடிப்பில்லை; சுதந்திரம் இல்லை; எண்ணமில்லை;செயலில்லை; சொல்லில்லை; சிந்தனை இல்லை; செத்த பிணமும்செயலற்ற பொம்மையும் போல் வாழவோ நாம் பூமியில் பிறந்தோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...