பொம்மைகள் - ஆர்.தியாகு


முத்தமிட்டு அனைத்தாலும்
அடித்து உடைத்தாலும்
எப்போதும் சிரிக்கிறது பொம்மைகள்!
சுகமும் துக்கமும்
ஒன்றாகிப்போனது பொம்மைகளுக்கு.,
குழந்தையின் முதல்பேச்சு முழுவதும்
பொம்மைகள்கூடதான்..
அம்மா என்று அழுதால்…
பொம்மையை கொடு!
அப்பாவை தேடினால்…
பொம்மையை கொடு!
பசியில் இருந்தால்…
பொம்மையை கொடு!.
குழந்தைக்கு கடவுளாகிப்போனது பொம்மை!
பேசாத பொம்மைக்கு எவ்வளவு சக்தி?
வளர்ந்த பின்பும் கிழடாகிய பின்பும்
பொம்மை பழக்கம் தொடரதான் செய்கிறது..
அன்பு.. கோபம்.. கெஞ்சல் என
பேசாத கடவுள் பொம்மையிடமும்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...