தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வழிதவறியப் பயணங்கள் : அழகூர். அருண்.  ஞானசேகரன்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பயணமதில்  வழிதவறிப்  பாதைமாற  லாமா ?          பாதைமாறி  சென்றுவாழ்வில்  பழியேற்கத்  தகுமா  ?செயல்தனிலே  நேர்மைதனை  மறக்ககிட்டும்  பழியும் ,          சிந்தையிலே  தெளிவிழக்க  சிறப்பெல்லாம்  அழியும் !மயக்கமுறத்  தான்தகுமோ ,  மதிமயங்கிப்  போக          மாட்சியதும்  அழிந்தொழியும்  மற்றவர்கள்  சிரிக்க !அயர்ச்சிதனைக்  கூட்டுவிக்கும்  வழியென்றப்  போதும்          அறவழியிற்  செல்வதன்றோ  முறையென்றே  ஆகும் !வழிதவறியப்  பயணங்கள்  வாழ்க்கையிலே  வேண்டாம்           வக்கிரத்தைக்  கொண்டிட்டு்  வாழ்வதுவும்  மடமை !அழிவுதனை  விலைதந்தே  வாங்குவதுவும்  கொடுமை,           அவலமதைக்  கண்டுவிட  விழைவதுவோ  அருமை ?பழியன்றோ  பலனாகும்  என்றுணர்தல்  வேண்டும்           பண்பாடே  சிதைந்துவிட  பாரேநமைத்  தூற்றும்!விழிப்புணர்வு  தனைக்கொண்டு  விலக்குவதே  அருமை,           விவேகமுடன்  அதைக்காத்து  வெற்றிகாணப்  பெருமை!பயணம்  போகின்றக்  காலம்  மாறலாம்               பாதை  மாறலாமா?        பண்பு  தனைமறந்து  குறுக்கு  வழிசென்று               பழியை  ஏற்கலாமா ?நியதி  தனைமறந்து  வளமை  தனைக்காண               நெஞ்சம்  எண்ணலாமா?        நேர்மை  தனைமறந்து  மனதும்  கருமைகொளல்               நியாயம்  என்றாகுமா ?வியர்வை  தனைசிந்தி  செல்வம்  தனைசேர்த்தல்               விவேகம்  என்றாகுமாம்;        வெற்றி  தனைக்காணும்  வரையில்  தளராமை               வேண்டும்  தானல்லவோ ?முயற்சி  இல்லாமல்  வெற்றி  தனைவேண்டும்               மூடமை  அகலட்டும் !        முன்னேறும்  வழிநல்ல  நேர்வழி  என்றாக்கி                முயன்றுநீ  வெல்லவேண்டும் !வழியதுவும்  தவறுங்கால்  வாழ்க்கையதே  மாறிடலாம் ,அழிவதுவும்  நிச்சயமென்  றாகிடலாம் ! --- செழிப்படையநல்வழியே  சிறந்ததென  நயமுடனே  உணர்ந்துநாம்செல்வதுவே  வாழ்வின்  சிறப்பு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.