வழிதவறிய பயணங்கள்: ஆர்.அருண்குமார்


வாழ்க்கைப் பாதைக்கு தேவை வழி
வார்த்தை தவறினால் மாறிடும் விதி.
தாழ்வில்லா மனதுக்கு அமைதி தேடு
தவிப்பை போக்கிட இதுதான் நியதி.
தனிமையே நம்மை மாற்றிடும்
தலைவிதி என்பது வீணே.
பதறினால் விழுவது மனம்தான்
பக்குவம் தேவை வாழ்விலே.
பயணித்தால் ஆயிரம் அனுபவம்
பார்த்துதான் பழக வேண்டும்.
துயரமின்றி வசந்தம் வீசிட
தொல்லை அறவே தவிர்த்திடு.
அனுபவங்களை அசைபோட்டு
அன்பான வாழ்வுக்கு விதைபோடு.
மாறினால் உள்ளம் நொந்திடும்
மௌனம்தான் உமக்கு நிரந்தரம்.
வழிதவறி பயணித்தால் ல்ட்சிய
வாழ்வே திசைமாறிடும்.
மொழி தெரியா ஊமையாய்
முற்றும் திரிவது தேவையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...