தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வழி தவறிய பயணங்கள்: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

அகரம் எழுதச்சொல்லி அந்த நாளில் அம்மா
         அருமையாய் கைபிடித்து முயலும்போது
உகரம் ஊகாரம் என்றழுது ஓடிமறைந்தேன்
         உருப்படாமல் போனநானும் கைநாட்டு ஆனேன்.

நடிகரின் சினிமாவில் மோகமும் தாகமும் கொண்டு   
         நாள்தோறும் படம்பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.
நடிப்பதே வாழ்வென்று நம்பிநான் நகரம் வந்து
        நாலாந்தர மனிதனாகி வாழ்வின் ஓரம் கண்டேன்.

கட்டிய மனைவியின் அடிமையானேன் ; பெற்றோரைக்
         காணநேர்ந்தால் வெறுத்தொ துக்கினேன் ; மனைவியின்
திட்டுக்கு  அஞ்சி பாசமிகு  மாதாபிதாவை இன்று
         நட்டாற்றில் விட்டு நாணமின்றி பொய்யாய்  வாழ்கின்றேன்.

கைகாட்டி மரமென வழியின் நின்றபெரியோர் சொன்ன
         கருத்தையும் ஏற்காமல் காரிருளில்  சென்றேன் ; இன்றோ
வழிதவறிய பயணமாய் ஆகிப்போன வாழ்வெனது ;
         விழிபிதுங்கி நிற்கின்றேன்; வீணாகிப் போன நானும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.