பட்டதாரி: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

நெல்விளைக்க விதைவிதைத்துப் பார்த்தி ருந்தால் நெடும்பயிரில் காய்த்ததெல்லாம் பதர்கள் போலகல்வியின்று வணிகமாக ஆன தாலே காசிருப்போர் எல்லோரும் பட்டம் பெற்றார்எல்லோரும் பட்டதாரி ஆன போதும் ஏற்றதிறன் இல்லாத கார ணத்தால்நல்லதொரு பணியவர்க்குக் கிடைக்க வில்லை நாட்டிலவர் வேலையில்லா பட்ட தாரி !தம்குழந்தை மனநிலையைக் கேட்டி டாமல் தம்குழந்தை திறன்களினை அறிந்தி டாமல்தம்கனவைப் பெற்றோர்கள் திணிப்ப தாலே தமக்கதிலே விருப்பம்தான் இல்லா போதும்அம்மாக்கள் கனவுகளைச் சுமையாய் ஏற்றே ஆழ்ந்துமனம் பதியாமல் படிப்ப தாலேசெம்மையான நுண்ணறிவு பெற்றி டாமல் செல்லாத பட்டங்கள் பெறுகின் றார்கள் !விருப்பங்கள் அறிந்துகல்வி புகட்டம் போதே வித்துக்கள் முத்துகளாய் விளையும் நன்றாய்தரும்கல்வி இந்நாட்டை உயர்த்து கின்ற தகுகல்வி ஆகும்மனம் ஒன்றிக் கற்றால்அருங்கல்வி ஏழையர்க்கும் கிடைக்கச் செய்தால் அறிவாளி புதைந்திடாமல் வருவான் மேலேபெருமையாகும் பட்டங்கள் பட்ட தாரி பெரும்மாற்றம் சாதனைகள் படைத்தே வெல்வான் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...