சுனாமியின் சுவடுகள்: ர. கோபாலகிருஷ்ணன்


கல்தோன்றா மண்தோன்றா நேரத்தில்
கடல் ஆழி ஒன்று பிறந்தது
சீறி பாய்ந்த ஆழி இங்கு
சிவப்பு கம்பளமிட்டது
விண்ணுயர்ந்த வள்ளுவனை
வியக்க தாண்டி வந்தது
வாய்மூடி வந்து வந்ததை
இழுத்துச் சென்றது
மழையை படைத்த ஆழி இங்கு
மரணம் பல படைத்தது
பனிகாலத்தில் வந்து பலரை
பார்த்து விட்டு சென்றது
மழைகாலத்தை எங்கள் கண்ணில்
மறைத்து விட்டு சென்றது
மெளனமகா வந்து சிலரை
மாயமாக்கிச் சென்றது..
முத்துப் பவளம் சிப்பி
வற்றாமல் தந்தது
முதுமை பாசம் சிரிப்பு
வருந்தாமல் எடுத்தது
வேய்யோனும் மறைத்து
விரைந்து விரைஇந்து வந்தது
வேலாயுதம் இல்லாமல்
குத்தி கழித்து போனது
வேங்கையாய் இருந்து
வேகமாய் வந்தது
வெறும் கண்ணீரை மட்டும்
விட்டுச் சென்றது
பாவப்பட்ட மக்களை
பறந்து வந்து அடித்தது
பயனற்ற மணலில்
பள்ளம் தோன்றி புதைத்தது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...