தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமி சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி !

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

அம்மா இருக்க  குழந்தை இறந்தது 
குழந்தை இருக்க  அம்மா இறந்தது !

குழந்தைகளை ஆதரவற்றோர் ஆக்கியது 
பெற்றோர்களை குழந்தையற்றோர் ஆக்கியது !

கொடுமைகள் சொல்லில் அடங்காது 
கொன்று மகிழ்ந்தது கொடிய சுனாமி !

எதிர்பாராத நேரத்தில் இடியாய் வந்தது 
எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது !

கடல்அலை ராட்சத பேரலையாய் வந்தது 
கண்டபடி வீசி அடித்துக் கொன்று மகிழ்ந்தது !

தூங்கியவர்களை நிமிடத்தில் பிணமாக்கியது 
தூரமாக நின்றவர்களை விரட்டிப் பிடித்தது !

இறுதிச்சடங்கிற்கு  சடலம் இல்லாமல் செய்தது 
இறந்தவர் பிழைத்தவர் தெரியாமல் போனது !

ஆடிய மனிதர்களின் ஆட்டம் நிறுத்தியது 
ஆட்டம்  இயற்கையிடம் செல்லாது அறிவித்தது  !

பலரது வீடுகள் இல்லாமல்  போனது
பலரது உடைமைகள் கடலுக்குள் போனது !

இன்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும்
என்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும் !   

இயற்கையின்  சீற்றம் எப்படி  உணர்த்தியது 
இயற்கையே பெரிது என்பதைக் காட்டியது !

சுனாமி சுவடுகள் பலரின் வாழ்வில் 
சோகம் தந்து வடுக்களாய் நிலைத்தது !

பஞ்ச பூதங்களை சிதைப்பதை நிறுத்து 
பஞ்சத்தில் ஆழ்த்திடுவோம் என உணர்த்தியது !   

இனி ஒரு சுனாமி வந்தால் இருக்காது உலகம் 
இனியாவது இயற்கை நேசிப்பை வழக்கமாக்குவோம் !

மனிதர்கள் மீது மட்டுமல்ல இயற்கையின் 
மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.