தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமி சுவடுகள்-  கவிஞர் கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

கடலன்னை என்றேதான் வணங்கி வந்தோம்!
கதிரவனின் அழகினில்தான் மயங்கி நின்றோம்!
கொடுக்கின்ற வள்ளலென நினைத்த போதே
கொடுங்கோலன் செயலாய் மாறி பாய்ந்தாய்!
தடுத்திடத்தான் முடியுமாமோ? உந்தன் வேகம்
தவிக்கின்றோம் கண்ணீரோடு நெஞ்ச சோகம்!
விடுகதையின் புதிர்போல ஒளித்து வைத்தே
வேகமாய் வீசித்தான் சாய்த்தே விட்டாய்!

சுகமான தென்றலைத்தான் வீசி வந்தாய்!
சொர்க்கமாய் எம்மையே தீண்டி வந்தாய்!
அகமகிழ்ந்து அளவளாவி இருந்த போதே
ஆவேச கோபத்தோடு ஏனோ பாய்ந் தாய்!
புகலிடமாய் உம்மையே நினைத்த போதே
போர்க்களமாய் கரையை மாற்றி விட்டாய்!
புகுந்தேதான் சேற்றினையே வாரி வாரி
புதைகுழியில் ஏன்தான் தள்ளி விட்டாய்!

அன்புக்கு அன்னையென பேரும் உண்டு
அன்னையே என்றேதான் வணங்கி நின்றால்
அன்பினையே மறந்தாயோ? ஏன் தான்
அடிமனதில் கோபத்தை தேக்கி வைத்தாய்!
கண்டிக்கும் உரிமையும்  உனக்கு ண்டே!
கொடுரமாய் ஏனோ? தண்டனை தந்தாய்!
உன்-கரையை தேடித்தான் வந்து நின்றால்
ஓடத்தான் செய்திட்டாய் தர்ம மாமோ ?

அமைதியாய் இருக்கின்றாய் என்றே எண்ணி
அழகினில்தான் மயங்கியே நின்ற வேளை
அமைதியாய் உள்ளுக்குள்ளே பொங்கி யெழுந்தே
அஞ்சித்தான் எங்களையே ஓட விட்டாய்!
பொறுமையின் சிகரமென்று உமை அழைக்க
போர்க்குணமாய் நீஏனோ மாறி நின்றாய்!
சிறுபிழைகள் ஏதேனும் செய்திருந் தால்
சேயென்றே மன்னித்து பிழை பொறுப்பாய்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.