2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலி தாண்டிய காற்று :  கு.முருகேசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

கடல் கடந்த அலை
சுனாமியால் வந்தது.
கழுத்தளவு தண்ணீர்
அடைமழையால் வந்தது.
கட்டுக்கு அடங்காத காற்று
புயலால் வந்தது.

மனிதன் குற்றம் செய்தால்
புயலில் அடைக்கிறோம்
புயலே குற்றம் செய்தால்
எங்கே அடைப்பது?

காற்றை தூய்மையாக்க
மரம் வளர்த்தோம்.
காற்றே!

நீ மரத்தையே
தூய்மையாகத்
துடைத் தெறிந்தாய்!

நீருக்கு மட்டுமே
தெரிந்த வேரை
ஊருக்கே தெரிய வைத்தாய்!

காற்றில் மின்சாரம்
எடுக்கலாம் என்றது
விஞ்ஞானம்.
இன்று காற்றுதான்
பல வீடுகளிலிருந்து
மின்சாரத்தை எடுத்தது.

காற்று இல்லாமல்
உயிர்கள்  இல்லை!
இன்று
பலத்த காற்றினாலே
பல உயிர்கள் இல்லை!

காற்றே!
நீ கட்டுக்குள் இருக்கும் வரைதான்
மண்
மரத்திற்கு கருவறை!
நீ வேலிதாண்டினால்
மரத்தையே
மண்ணில் சாய்க்கிறாய்!

காற்றே!
நீ மண்ணில் சாய்த்தது
வெறும் மரத்தை அல்ல
இந்த மண்ணின் மைந்தர்களை!

தோட்டத்தில்!
ஆடு மாடுகள் வேலி தாண்டினால்
இலை பறிக்கும்
மனிதன் வேலி தாண்டினால்
கனி பறிப்பான்.
காற்றே!  நீ வேலி தாண்டினால்
தோட்டத்தையே பறிக்கிறாய்!

காற்றுக்கு தலையசைத்த மரங்களை
விட்டுச் செல்கிறாய்!
எதிர்த்து நின்ற மரங்களை
வீழ்த்திச் செல்கிறாய்!

அரைமணி நேரத்தில் வீழ்த்தினாய்
எங்கள் அரை நூற்றாண்டு உழைப்பை!

காற்றை வேலியும்
கன்னியை தாலியும்
ஒருபோதும்  கட்டுப்படுத்தாது
தானாக அடங்கினால் ஒழிய!

காற்றே!
நீ வேலி  தாண்டியதால்
எலக்ட்ரிக் பவரும் இல்லை
செல்போன் டவரும் இல்லை.

எதிரிகள் எல்லை தாண்டினால்
புயலாய் அடிப்போம்!
புயலே எல்லை தாண்டினால்
எப்படி தடுப்போம்!

மனிதனின்  வேலி தாண்டிய சிந்தனையால்
கற்காலம் கணினிக் காலம் ஆனது!
வேலி தாண்டிய காற்றால்
கணினி காலமும் கற்காலம் ஆனது!

காற்றே! நீ
மரங்களையும் மனிதர்களையும்
 மண்ணில் சாய்க்கலாம் !
ஏன் கூரைகளையும்
குப்பையில் சாய்க்கலாம்!

மனித நேயத்தை
எங்கே சாய்ப்பாய்?

காற்றே! நீ வா
பூவை வருடும் தென்றலாய்!
புல்லாங்குழல் வழியே இசையாய்!
உயிர் மூச்சாய்!
வரவேற்போம் முழு மூச்சாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.