நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எதிர்கால கனவு" ரீகன் •ஜெயக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

கண்மாய் ஆறுகுளம்
ஒருகாலத்தில்
கனவில்
மட்டுமே வருங்காலத்தில் !
காட்சியாகப்
போகுது அரங்கங்களில்
காட்சியகத்தில்
கருப்பு வெள்ளையாய் !
அன்னைக்கு துணையாய்
அரும்பும்
அண்ணாந்து நோக்குது குறும்பாய் !
ஆழ்ந்த சிந்தனையில் என்னவோ
ஆழ்மனதில் எதிர்கால
நினைவோ !
சிந்திக்க ஆரம்பித்தால்
சிறுவயதில்
சிகரத்தை தொடலாமே வாழ்வினில் !
சீரழியும் சமுதாயமும்
சீர்பெறவே
சீரான சிந்தனைகளும்
அவசியமே !
சிந்தனையின் துளிகளும்
சிந்தையில்
சிறிதேனும் தேங்கினால்
சிறக்குமே !
சிதறாமல் சேமித்தால்
சிந்தனைகள்
சிறுதுளி பெருவெள்ளமாய்
பெருகுமே !
இனிதே இளமைக்காலம்
பிறப்பினில்
இன்பமே இறுதிக்காலம்
நினைவினில் !
இன்புற்று வாழ்ந்திடவே இளைஞர்களே
இனியேனும் சிந்தியுங்கள்
நல்லதையே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.