நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக்கோடு: அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எல்லை இல்லா அன்பை மட்டும்
எடுத்துக் கொள்வோம் உலகிலே
எல்லைக் கோடு போடும் கூட்டம்
இருக்க வேண்டாம் அருகிலே
தொல்லை தரும் எல்லைச் சண்டை
நிதமும் நமக்குத் தேவையா
தோளின் மேலே கையைப் போட்டு
இருந்தால் கலக்கம் இல்லையே
எல்லைக் கோடே இல்லா உலகம்
பிறந்து விட்டால் நல்லது
எல்லைக் காக சண்டை போட்டால்
உயிருக் கில்லை நல்லது
அன்பை மனதில் கொண்டோர் மட்டும்
புதிய உலகில் பிறக்கட்டும்
அன்பைக் கொன்று பிரிவை
வளர்ப்போர்
மறைந்து எங்கோ போகட்டும்
எல்லை காக்கும் வீரர் வாழ்க்கை
முடியும் வரைக்கும் தனிமையே
எல்லை அகற்றி மகிழ்ச்சி புகட்ட‌
அடியும் வைத்தால் இனிமையே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.