சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டிசம்பர் 29 - சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

ஒவ்வொருஆண்டும் டிசம்பர் 29-ஆம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

DIN

ஒவ்வொருஆண்டும் டிசம்பர் 29-ஆம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உயிர் வகையினங்களின் தாங்கும் அல்லது நிலைக்கும் தன்மை என்பது அவற்றின் மரபணுப் பண்புகளைப் பாதுகாப்பதிலே அடங்கி இருக்கிறது. பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க இதுவரை சர்வதேச அளவில் நான்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகவங்கி, ஐக்கிய நாடுகள் முன்னேற்றத் திட்டக்குழு ஆகிய இரண்டும் இணைந்து 1990ல் உலகளாவிய சுற்றுச்சூழல் மையம் ஒன்றை ஆரம்பித்தது. மூன்று வருட காலத்திற்கு முன்மாதிரி திட்டமாக இதை நடத்தி வந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் உள்ள அரசாங்க மற்றும் அரசுசார நிறுவனங்களை ஒன்றிணைத்து சர்வதேச பல்லுயிர் பெருக்க பாதுகாப்புச் செயல்பாட்டுத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டக்குழு ஆகியன.

உலக பல்லுயிர் பெருக்க உடன்பாடு 1992ம் வருடம் பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனிரோவில் நடத்தப்பட்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த உடன்பாட்டின் மூலம் உலகளாவிய வகையில் பல்லுயிர் பெருக்கத்தை உபயோகிக்க, தொழில் நுட்பங்களை பரிமாற்றங்கள் செய்து கொள்ள, பாதுகாப்புத் திட்டங்களை வரைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சர்வதேச அளவில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் நிதி வசதிகள் செய்து தரவும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளது.

இவற்றை நினைவு கூறவே டிசம்பர் 29-ஆம் தேதியன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.