‘முரட்டுக்காளை’யில் ரத்தி!
தமிழ்த் திரைப்பட உலகின் தந்தை என்று போற்றப்படுகின்ற அமரர் ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களின்


தமிழ்த் திரைப்பட உலகின் தந்தை என்று போற்றப்படுகின்ற அமரர் ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களின் பாதையில் அன்னாரது குமார்கள் தொடர்ந்து பயணம் செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.
தங்கள் தகப்பனாரின் நினைவையே தக்க துணையாகக் கொண்டு அவர்கள் தெலுங்கில் தயாரித்து அளித்த ‘புன்னமிநாகு’ நூறாவது நாள் விழாவைக் கண்டு மாபெரும் வெற்றிப் படைப்பாகியது.
தொடர்ந்து தமிழில் ‘முரட்டுக்காளை’யை ஏவி விடுகிறார்கள். இந்த ‘மஞ்சு விரட்டில்’ காளையை அடக்கப் போகிறார்கள் ரசிகர்கள்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. விறுவிறுப்பாக அந்த காட்சி, நீண்ட நாட்கள் நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏவி.எம் சகோதரர்களுடன் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் யூனிட்டும் இணைந்திருப்பது தேனோடு சேர்ந்த பாலாகிறது. கேட்க வேண்டுமா, இனிமைக்கு? அந்த இனிமைக்கு இனிமை சேர்ப்பது போல முரட்டுக்காளையில் ரத்தி கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...