ரத்த பாசம் – விமரிசனம்
பாசத்தை விட ரத்தம் தான் அதிகமாகப் பிரவாகமெடுத்து ஓடுகிறது. (படத்தில் எக்கச்சக்கமான கொலைகள்


பாசத்தை விட ரத்தம் தான் அதிகமாகப் பிரவாகமெடுத்து ஓடுகிறது. (படத்தில் எக்கச்சக்கமான கொலைகள் இடம் பெற்றுள்ளன) நம்பியார், மனோரமா, மோகன்பாபு ஆகிய மூன்று வில்லன்களுக்கும் சக அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆளுக்கொரு கொலை செய்கிறார்கள்!
சிவாஜிகூட கொன்னுபுட்டார்! (நடிப்பில்தான்) ‘பாசமலரு’க்குப் பிறகு இதில் பாசத்தை பலமாகப் பொழிந்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதில் ஜெய்சித்ரா நடித்திருக்கிறார். எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி அமைந்துவிட்ட அவரது ஒப்பனையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.
பாவம் பிரமிளா! ஜெய்கணேஷிடமும், நம்பியாரிடமும் மாறி மாறிக் கன்னத்தில் அடி வாங்குவதற்குத்தான் அவருக்குச் சரியாக இருக்கிறது.
மாஸ்டர் ஜெய்கணேஷ் (ஜெய்கணேஷின் மகன்) பிய்த்து உதறிவிட்டான்.
அது சரி, நாதசுரமும், தவிலுமாக மனோரமா, தேங்காய் சீனிவாசன் புடைசூழ ஸ்ரீபிரியா எதற்கு வெளிநாடு செல்கிறார்? ‘அவர் ஒரு நாட்டியக் கலைஞர். ஆகவே நிகழ்ச்சி அளிக்கப் போகிறார்’! என்றால், அதற்கு அந்த இரண்டும் பக்கவாத்தியங்களா?
இந்தப் படம் டிரைவர் இல்லாத பஸ்சைப் போன்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...