(1) ஓர் ஆய்வாளரானவர், தான் அமர்த்தப்பட்டிருக்கின்ற பரப்பிடத்தின் உள்ளூர் எல்லைக்குள்:
a) இந்தச் சட்டத்தின்படியான குற்றச்செயல் ஒன்று புரியப்பட்டுள்ளதென்றோ அல்லது புரியப்பட்டுவருகின்றதென்றோ தான் நம்புவதற்குக் காரணம் கொண்டுள்ள இடமெதிலும் தான் தேவையெனக் கருதுகின்ற உதவியாளர்கள் எவரோனும் இருப்பின் அவர்களுடன், எல்லா தகுமான நேரங்களிலும் (reasonable times)நுழைந்து சோதனையிடலாம்; எந்த மருந்துச் சரக்குகள் மற்றும் பிற (மருத்துவப்) பொருட்கள் பொறுத்து இந்தச் சட்டத்தின்படி குற்றச்செயல் ஒன்று புரியப்பட்டுள்ளதென்றோ அல்லது புரியப்பட்டுவருகின்றதென்றோ தான் நம்புவதற்குக் காரணங்கொண்டுள்ள அந்த மருந்துச் சரக்குகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களின் இருப்பைக் கைப்பற்றலாம்; மற்றும்
(b) (a) கூறில் சொல்லப்பட்டுள்ள இடமெதிலும் காணப்படும் பதுவுரு, பதிவேடு ஆவணம் எதனையும் அல்லது பிற சான்றுப் பொருள் எதனையும் ஆய்வு செய்து இந்த்ச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் ஒன்றைப் புரிந்தமைக்கு அது சான்றினை அளிக்கக்கூடும் என்று தான் நம்புவதற்குக் காரணங்கொண்டிருப்பின், அதனைக் கைப்பற்றலாம்.
(2) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 2/1974) வகைமுறைகள், அவை மேற்சொன்ன சட்டத்தின் 94-ஆம் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட பிடியாணை ஒன்றின் அதிகாரத்தின் கீழ்செய்யப்பட்ட சோதனை அல்லது கைப்பற்றுகை ஒன்றின் அதிகாரத்தின் கீழ்ச்செய்யப்பட்ட சோதனை அல்லது கைப்பற்றுகை ஒன்றின் பொருந்துவன போன்றோ, இயலுகின்ற அளவுக்கு, இந்தச் சட்டத்தின்படியான சோதனை அல்லது கைப்பற்றுகை எதற்கும் பொருந்துதல் வேண்டும்.
(3) ஓர் ஆய்வாளரானவார் (a)-ஆம் உட்பிரிவின் (l) கூற்றின்படி மருந்துச் சரக்கு அல்லது பிற (மருத்துவப்) பொருட்களின் இருப்புக்களைக் கைப்பற்றுகிறவிடத்து, அவர் எவ்வளவு விரைவில், இயலுமோ அவ்வளவு விரைவில் குற்றவியல் நடுவர் ஒருவரிடம் தகவல் தெரிவித்து அவற்றின் பாதுகாப்பு குறித்து ஆணைகள் பெறுதல் வேண்டும்.
(4) ஓர் ஆய்வாளரானவர், 1-ஆம் உட்பிரிவின் (b)-கூறின்படி, பதிவுரு, பதிவேடு, ஆவணம் அல்லது பிற சான்றுப்பொருள் எதையும் கைப்பற்றுகின்றவிடத்து, அவர் எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வலவு விரைவில், குற்றவியல் நடுவர் ஒருவரிடம் தகவல் தெரிவித்து அவற்றின் பாதுகாப்புக் குறித்து அவரது ஆணைகளைப் பெறுதல் வேண்டும்.
(5) ஆய்வாளரொருவர் இந்தச் சட்டத்திலோ அல்லது அதன்படியோ தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்துகையில் அவரை அவரோனும் வேண்டுமென்றே தடுப்பாராயின், அவர் ஓராண்டு வரையில் நீடிக்கலாகும் சிறைத்தண்டனையோ அல்லது ஓராயிரம் ரூபாய் வரையில் நீடிக்கலாகும் அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.