/

காவிரி தீர்ப்பில் கூட்டலில் தவறா? ஆற்றின் ஓட்டம் எவ்வளவு? கர்நாடக மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நஷ்டத்தை ஏற்பது யார்?

மேற்படி ஒதுக்கீட்டின் விளைவாக,  கர்நாடகா மாநிலம்   தமிழ்நாட்டின் எல்லைப்புற எல்லைக்குள், அதாவது, பிலிகுண்டுவில், 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்படி செய்யவேண்டும்.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:09 am

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

மாநிலங்களுக்கிடையே திருத்தப்பட்ட நீர் ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பில், 447-ம் பக்கத்திலிருந்து 452-ம் பக்கம் (பத்திகள் 396-399) வரை தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவற்றைப் பார்ப்போம்

X.10 மாநிலங்களுக்கிடையே திருத்தப்பட்ட நீர் ஒதுக்கீடு
X.10 Revised water allocation amongst competing States

396. கர்நாடகாவில் உருவான காவேரி நதி பிற மாநிலங்களில் முழுதாகப் பாய்ந்து  வங்காள விரிகுடாவில் கலக்கிறது. படுகை மாநிலங்களுக்கு சமமான நீதி உறுதி செய்யும் சமமான ஒதுக்கீட்டின் கொள்கைகளின் வளர்ச்சியினால், அனுபோக உரிமை (Prescriptive right) மற்றும் இயற்கையான ஓட்ட உரிமைகள் (right to the natural flow)இறுதியடைகிறது.   இப்போதைய தமிழ்நாடு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தை ஒப்பிடும் பொழுது, வரலாற்று உண்மைகளைப் பொறுத்தவரை கர்நாடகா,  அதன் 28 மாவட்டங்களில் / தாலுகாக்களில் பெரும் வறட்சி காலங்களிலும் காவிரி மேல்படுகை என்ற வகையில்  காவேரி மேற்பரப்பு நீரையும் மற்றும் பயன்பாட்டிலும் ஏற்பட்ட தடைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்14.75 டி.எம்.சி-யில், கூடுதல் டி.டி.சி யில் கூடுதல் தண்ணீர் அளவை வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், அதாவது 10 டிஎம்சி  (தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் கிடைப்பதன் காரணமாக)   + 4.75 TMC (பெங்களூருவின் முழு நகரத்திற்கும் குடிநீர் மற்றும் உள்நாட்டு நோக்கங்களுக்கான தேவைகளுக்கு).  வேறுவிதமாக கூறினால், இந்த உறுதிப்பாட்டைக் கருத்தின் அடிப்படையில் இறுதி ஒதுக்கீடு பின்வருமாறு:

Story image

 397. மேற்படி ஒதுக்கீட்டின் விளைவாக,  கர்நாடகா மாநிலம்   தமிழ்நாட்டின் எல்லைப்புற எல்லைக்குள், அதாவது, பிலிகுண்டுவில், 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்படி செய்யவேண்டும். மேலே உள்ள மாற்றங்கள் தவிர,  ஆய்வுக்கு தீர்ப்பாயத்தால் பதிவு செய்த உறுதிப்பாடு மற்றும் கண்டமுடிவுகளில் எந்த குறுக்கீடும் செய்யக்கூடாது.

398. இந்த கட்டத்தில், தீர்ப்பாயம் ,கர்நாடகா மாநிலம் மாதாந்திர விநியோகங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை பின்வருமாறு சொல்கிறது -

“காவேரி நீரில் பெரிய பங்குதாரர்கள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் என்பதால், ஒரு சாதாரண ஆண்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து மாநிலங்களுக்கிடையேயுள்ள தொடர்பு மையத்தில் மாநிலங்களுக்கிடையேயுள்ள தற்போது பொதுவான எல்லைக்குள் அமைந்துள்ள  பிலிகுண்டு அளவீடு மற்றும் வெளியீடு மையத்தில் (Gauge and discharge station) இருக்க வேண்டிய நீர் அளவு”

Story image
Story image

மேலே ஒதுக்கப்பட்ட 192 TMC தண்ணீரில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 182 TMC தண்ணீரும்    மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்காக ஒதுக்கப்படும் 10 TMC தண்ணீரும் உள்ளடங்கியுள்ளது. 

399. தீர்ப்பாயம் மாதாந்திர அட்டவணையை சரியாக கண்காணிக்க சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் உதவியுடன்,ஒழுங்குமுறை ஆணையத்தினை நியமனம் செய்ய அறிவுறுத்தியுள்ளது, மேற்புற நிலப்பரப்பு மாநிலமானது (the upper riparian State) வடிகால் நிலப்பகுதிகள் பாதிக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்ட உத்தரவினை, அப்படியே தருவது பொருத்தமானது என நாம் கருதுகிறோம்: -

பிரிவு - xiv

காவிரியின் உபநதிகள் உட்பட காவிரி நீர் எந்த விதத்திலும் குறையும் நீரின் அளவை வைத்துத் தான், நீரின் உபயோகம் கணக்கிடப்படும். நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாகிப் போவதன் மூலம் ஏற்படும் இழப்புகளையும் ‘நீர்க்குறைவில்” உள்ளடக்கியதாகும். காவிரி நதி அமைப்பின் எந்த நீரோடையின் குறுக்கே உள்ள எந்த நீர்த்தேக்கத்திலும் உள்ள சேமிப்பு நீர் ஆவியாகிப் போவதன் மூலம் ஏற்படும் வருடாந்திர இழப்புக்களைத் தவிர, கையிருப்பில் உள்ள நீரின் ஒரு பகுதியாக இருக்கும். ஒரு மாநிலத்தால் எந்த நீர் ஆண்டிலும் அதன் சொந்த உபயோகத்திற்காக எந்த நீர்த்தேக்கத்திலிருந்தாவது திருப்பிவிடப்படும் நீர் அந்த நீர் ஆண்டில் அந்த மாநிலம் உபயோகித்ததாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வீட்டு உபயோகம், நகராட்சி நீர் விநியோகம் மற்றும் தொழில் சார்ந்து உபயோகத்திற்கான அளவை கீழே குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்.
 
பிரிவு - xv

எந்த ஆற்றுப்படுகை மாநிலம் அல்லது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமும் ஒரு குறிப்பிட்ட நீர் ஆண்டில் எந்த மாதத்திலாவது அதற்கென்று ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து எந்தப் பகுதியையாவது பயன்படுத்த முடியாமல் போகும் பட்சத்தில், இதற்கென்று ஏற்பட்ட நீர்த்தேக்கங்களில் தேக்க வேண்டுமென்று அனுமதி கோரினால், அதற்கு அதே ஆண்டில் பின்வரும் ஏதாவது ஒரு மாதத்தில் அதன் உபயோகப்படுத்தப்படாத பங்கைப் பயன்படுத்துவதற்கு உரிமை உண்டு. ஆனால், இந்த ஏற்பாட்டிற்கு அமலாக்க ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

பிரிவு - xvi

எந்த நீர் ஆண்டிலாவது, எந்த மாநிலமும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட பங்கு நீரிலிருந்து ஒரு பகுதியைப் பயன்படுத்துவதற்கு இயலாமற் போவது, பின்வரும் ஆண்டில் அதன் பங்கு நீரைப் பறிகொடுத்ததாகவோ அல்லது கைவிடுவதாகவோ ஆகாது. மேலும், வேறுமாநிலம் மேற்படி நீரைப் பயன்படுத்தி இருந்தால் பின்வரும் ஆண்டில் அந்த மாநிலத்தின் பங்கை அதிகரிக்கவும் செய்யாது.

பிரிவு - xviii

இந்த நடுவர் மன்றத்தின் ஆணையுடன் ஒத்துப் போகிற முறையில், அதன் எல்லைகளுக்குள் நீரின் உபயோகத்தை ஒழுங்குபடுத்தவும் அல்லது அந்த மாநிலத்திற்குள் நீரின் பலன்களை அனுபவிக்கவும் எந்த மாநிலத்திற்கும் உள்ள உரிமை அல்லது சக்தி அல்லது அதிகாரத்தை இந்த நடுவர் மன்றத்தின் ஆணையில் உள்ள ஷரத்துகள் எதுவும் பலவீனப்படுத்தாது.

400. தண்ணீர் அளவும் குறைப்பு என்ற பார்வையில், தமிழ்நாட்டுடனான இரு மாநில எல்லைக்குள், அதாவது பிலிகுண்டுலையில், தர்க்கரீதியாக,கர்நாடகா வெளியிடும் தீர்ப்பாயத்தினால் சொல்லப்பட்ட மாதாந்திர வெளியீடுகளில் ஒரு விகிதாசார குறைவு இருக்கும்.

தீர்ப்பில் கூட்டல் தவறா..? விளக்கம் தேவை

1.    உச்சநீதிமன்றம் பிலிலுண்டுவில் மாதாந்திரமாக திறக்கச் சொன்ன மொத்த அளவு 192 TMC

Story image

இந்த 198.25 TMC இவை தண்ணீர் பிலிகுண்டுவின் வழியாகத் தான் வர வேண்டியுள்ளது. அதனால் மீதமுள்ல 6.25 TMC தண்ணீரின் கணக்குத் தான் என்ன..அப்படியென்றால் சுற்றுச்சூழலுக்கு ஒதுக்கப்பட்ட 10 TMC முழுதும் கர்நாடகாவுக்கா..

2.  மைசூர் மற்றும் மெட்ராஸ் அரசுகளுக்கிடையே ஏற்பட்ட இறுதி ஒப்பந்தம்,1924 (இணைப்பு-1) விதி. 12 (i) 28, இல் ஜனவரி முதல் 27 மே மாதம் வரையில் அனைத்து நாட்களிலும் கிருஷ்ணராஜசாகராவிலிருந்து பெறப்படும் ஆற்றின் ஓட்டம், சிவசமுத்திரம் அணைக்கட்டுக்குக் கீழ் மெட்ராஸுக்கு ஓடும் நீர் 900 கியூசெக்ஸ்க்கு குறையாமல் பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் உச்சநீதிமன்றமோ ஆற்றின் ஓட்டம் எவ்வளவு கியூசெக்ஸ் என அறிவுறுத்தவில்லை.

3. கர்நாடகாவில் பெய்யும்மழையின் போது, அவர்கள் விருப்பத்திற்கு மாதஅளவை விட அதிகம் திறந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் நஷ்டத்தை கர்நாடகாவை ஏற்கச் சொல்லவில்லையே. அந்த நஷ்டத்தை தமிழக அரசு ஏன் ஏற்க வேண்டும்?!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.