அனுராதா கிருஷ்ணமூர்த்தியுடனான இந்த நோ காம்ப்ரமைஸ் நேர்காணலில் கச்சேரியானாலும் சரி, சின்னத்திரை படப்பிடிப்புகளானாலும் சரி தன்னை எப்படி எக்ஸ்போஸ் செய்து கொள்ள அவருக்குப் பிடித்தமோ அவ்விதமாகவே அவர் தன்னை முன் வைத்து வந்திருக்கிறார். எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டிய இடங்களில் எல்லாம் மிகத் தண்மையாக தனது மறுப்பைக் கூறவும் அவர் தயங்கியதாகத் தெரியவில்லை. தான் இப்படித்தான் இருக்க வேண்டும். நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. கச்சேரிகளில் அது கல்யாணக் கச்சேரி என்ற போதும் சினிமா பாடல்களைப் பாடுவதில்லை என்பன போனற பல நோ காம்ப்ரமைஸ் கொள்கைகளை அவர் மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார்.