தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே!

நான் வாழ்க்கையை அவசர அவசரமாக வாழ்ந்து முடிக்க விரும்பவில்லை... ஐ லவ் லைஃப்... சிங்கப்பூர் நன்னாருக்கு, மலேசியா நன்னாருக்குன்னு சொல்றவா நம்மூரையும் நல்லதா பண்ண தெருவில் இறங்கி போராட வேண்டாமோ?!

News image
Updated On :6 டிசம்பர் 2018, 5:58 am

சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த திருமதி காமாட்சி சுப்ரமணியம் அவர்கள் தான் நமது இந்த வார தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ சிறப்பு விருந்தினர். 95 வயதில் பாட்டி லிஃப்டை எதிர்பார்க்காமல் படியேறி ஸ்டுடியோவுக்கு நடந்த வேகத்தில் தெரிந்தது இந்த மகத்தான வாழ்வின் மீது அவருக்கிருந்த ப்ரியம்! 

‘நான் வாழ்க்கையை அவசர அவசரமாக வாழ்ந்து முடிக்க விரும்பவில்லை... ஐ லவ் லைஃப்... சிங்கப்பூர் நன்னாருக்கு, மலேசியா நன்னாருக்குன்னு சொல்றவா நம்மூரையும் நல்லதா பண்ண தெருவில் இறங்கி போராட வேண்டாமோ?! ஒருத்தர் ஃபோன் பண்ணார்... பாட்டி எங்க பக்கத்துல இன்னின்ன விதத்துல பிரச்னை, நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டார். நான் ரொம்ப சந்தோசமா சரின்னேன். அவருக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முதற்கொண்டு அந்தத்துறை சேர்ந்தவா அத்தனை பேர் ஃபோன் நம்பரையும் தந்து உங்க பிரச்னை பத்திப் பேசுங்கோன்னேன்... அவ்வளவு தான். அப்புறம் அவரை ஆளையே காணோம். அவர் நினைச்சுண்டார், நானே எல்லாத்துக்கும் பேசி அவரோட பிரச்னையை சால்வ் பண்ணி தருவேன்னுட்டு. நான் என்ன சொல்றேன்னா? நான் உங்களோட நிக்கறேன்... வாங்க ரெண்டு பேருமா கடமையைச் சரியா செய்யாத கார்ப்பரேஷன்காரங்களையும், மத்தவாளையும் ஒரு கை பார்க்கலாம்ங்கறேன். ஆனா அவா, நினைச்சுக்கறா அவங்க இறங்கி வந்து எந்த ஸ்டெப்பும் எடுக்காம நானே அவங்க பிரச்னையை சுமந்துண்டு எல்லா இடத்துக்கும் ஓடியாடி சால்வ் பண்ணனும்னுட்டு. இது சரியில்லை. இன்னைக்கிருக்கற யங்ஸ்டர்ஸ் எல்லாம் அப்படி நினைக்கப் படாது. இதான் என்னோட ஆதங்கம்.’

- என்று பாட்டி சொல்லி முடிக்கையில் அவரது ஆதங்கம் நம்மையும் யோசிக்க வைப்பதாகவே இருக்கிறது.

ஏனென்றால் சமூக அக்கறை, சமூகப் பொறுப்புணர்வு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட நிபந்தனையோ அல்லது வாழ்க்கை முறையோ அல்ல. அது நம் அனைவரின் ரத்த நாளங்களுக்குள்ளும் சுடச்சுட சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருக்க வேண்டிய ரத்தம் போன்று விறு விறுப்பாக இருக்க வேண்டியதொரு உன்னதமான உணர்வு. அதைத் தட்டி எழுப்பத் தான் திருமதி காமாட்சி சுப்ரமணியம் போன்றவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாட்டியின் நேர்காணலைக் கண்டபிறகு நம்மையும் அந்த சுரணை தாக்கினால் சரி!

இது நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே...

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி.காமில் வெளியாகும். காணத்தவறாதீர்கள்.

Related Article

பேஷண்ட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்த டாக்டர் அந்த டெஸ்ட் எடு, இந்த டெஸ்ட் எடு என்று அலைக்கழிக்க மாட்டார்!

ஸ்விக்கி, பீட்ஸா, பர்க்கர்லாம் வந்ததால பாட்டி சுட்ட வடை போணியாகல!

எனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அரசியலுக்கு நான் எதுக்கு?!

நானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்?!

குற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன!: லீனா மணிமேகலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.