வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி..

News image

-

Updated On :24 ஏப்ரல் 2026, 2:56 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியாகும் என்ற ஆவல் பலருக்கும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நேற்று 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகி, வரலாறு காணாத சாதனை படைக்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பட்டியல் காரணமாகவே வாக்காளர்களின் எண்ணிக்கைக் குறைந்து, சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்ற தரவுகளை ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இப்போதைக்கு வெளியாகாது என்றே கூறப்படுகறிது. அதாவது தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுவை, அஸ்ஸாம் கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நாளில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் 8 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

எனவே, ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களும் நிறைவடையும்வரை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை நாளிதழ்களிலோ அல்லது மற்ற எந்த ஊடகங்களிலோ தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படக் கூடாது.

மேற்கு வங்கத்தில் ஏப். 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்ற பிறகே அனைத்து ஊடகங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

About when the post-election polls will be released..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.