தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி

News image
Updated On :30 மார்ச் 2017, 6:30 pm

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கிண்ணம்
கறுப்பு எள் - கால் கிண்ணம்
உளுத்தம் பருப்பு - கால் கிண்ணம்
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
நல்ல எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி பின் காற்றில் நன்றாக உலர்த்தவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம் சேர்த்து மிளகாய் வற்றல் தாளித்து அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, எள் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ( அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்).  பிறகு, வறுத்த கலவைகள் சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி தயார். சூடான சாதத்தில் போட்டு சிறிது நல்லெண்ணெய்விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சத்து நிறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.