தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பயத்தம் பருப்பு மசியல்

News image
Updated On :2 பிப்ரவரி 2017, 6:30 pm

தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 200 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
சின்ன வெங்காயம் -  100 கிராம்
தக்காளி - 2
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
தனியா பொடி  - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி, புதினா தழை - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: பயத்தம் பருப்புடன், தோல் நீக்கி தட்டிய இஞ்சி, மஞ்சள் பொடி, தக்காளி சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட்டு மசித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் உரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். குக்கரில் வெந்த பருப்போடு சின்ன வெங்காயம், மிளகாய் பொடி, தனியா பொடி, உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.


கொதித்துப் பொடி வாசனை அடங்கியதும். பின்னர், எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கி கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொட்டவும். புதினா, கொத்தமல்லி இலை தூவவும். நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பயத்தம் பருப்பு மசியல் தயார்.

இதை ரைஸ், இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ஆப்பம், சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாற சுவையாக இருக்கும்.


மருத்துவ குணங்கள்: பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.