தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தக்காளி தோசை

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 6:30 pm

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கிண்ணம்
முழு உளுந்து - கால் கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப்பொடி - சிறிதளவு
பழுத்த தக்காளி - 4
எண்ணெய்  - தேவைக்கேற்ப
மாவில் கலப்பதற்கு தேவையான பொருட்கள்
சீரகம் - 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
கொத்துமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:
இரவே அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து, காலையில் மாவு அரைத்து வைத்து விட்டால், இரவு டிபனுக்கு தயாரிக்கலாம். முதலில், பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.


பிறகு அத்துடன் நறுக்கிய தக்காளிகளையும் சேர்த்து அரைக்கவும். குறைந்த தண்ணீர் விட்டு, ஊறின அரிசி, உளுந்து, வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். நன்கு மசிந்ததும், தக்காளி - மிளகாய் போன்றவற்றை அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு அரைக்கவும். (ரவா தோசை மாவு போல நீர்க்க இருக்க வேண்டும்). சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்துமல்லி ஆகியவை மாவில் சேர்த்து,  6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.


ரவா தோசை போல, ஓரத்திலிருந்து மாவு ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, ரோஸ்ட்டாக வார்த்து எடுக்கவும். மிகவும் ருசியான, லைக்கோபீன் நிறைந்த தக்காளி தோசைகளை, வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.