வரகு அரிசி உப்புமா
வரகு அரிசி – ½ கப் (நன்றாகக் கழுவி தனியே வைக்கவும்)தண்ணீர் – 1 ½ கப்எண்ணெய் – 1 டீஸ்பூன்


தேவையானவை
வரகு அரிசி – ½ கப் (நன்றாகக் கழுவி தனியே வைக்கவும்)
தண்ணீர் – 1 ½ கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு அதன் பின் இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
பின்பு 1 ½ கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின்பு அடுப்பை சிம்மில் வைத்து, வரகு அரிசியைத் தண்ணீர் வடிகட்டியபின் போடவும். பின்பு லேசாகக் கிளறவும்.
ஒரு சிறிய மூடி போட்டு மூடவும். ஐந்து நிமிடம் கழித்து கிளறிவிடவும். உப்புமா பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு – வரகு எலும்பு உறுதி பெறச் செய்யும். இந்த உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...