தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ராகி குழிப் பணியாரம்

News image
Updated On :24 ஜனவரி 2017, 6:30 pm

தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
வரகு அரிசி - 1 கிண்ணம்
ராகி மாவு - 1 கிண்ணம்
உளுந்து -  1 கிண்ணம்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெல்லம் - 2 கிண்ணம்
ஏலக்காய் - 5
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - 1  தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு

செய்முறை: புழுங்கல் அரிசி, வரகு அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஊற வைத்து, அரைத்து, ராகி மாவை அதனுடன் கலந்து சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு நன்கு புளித்ததும் வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவினை சிறு சிறு குழிகளில் ஊற்றவும்.  ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மறு பக்கம் திருப்பி வேகவிடவும். கார ராகி குழிப்பணியாரம் செய்ய, மாவுடன் வெல்லத்திற்கு பதில் உப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஊற்றவும்.

இந்த ராகி குழிப்பணியாரம் செய்ய காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக
இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.