பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நா.நாச்சாள்

தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
வரகு அரிசி - 1 கிண்ணம்
ராகி மாவு - 1 கிண்ணம்
உளுந்து -  1 கிண்ணம்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெல்லம் - 2 கிண்ணம்
ஏலக்காய் - 5
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - 1  தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு

செய்முறை: புழுங்கல் அரிசி, வரகு அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஊற வைத்து, அரைத்து, ராகி மாவை அதனுடன் கலந்து சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு நன்கு புளித்ததும் வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவினை சிறு சிறு குழிகளில் ஊற்றவும்.  ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மறு பக்கம் திருப்பி வேகவிடவும். கார ராகி குழிப்பணியாரம் செய்ய, மாவுடன் வெல்லத்திற்கு பதில் உப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஊற்றவும்.

இந்த ராகி குழிப்பணியாரம் செய்ய காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக
இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.