ஆனால் அடுத்தடுத்து, சச்சின், சேவாக், காம்பீர் போன்ற நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட்டில் நிலைத்திருந்த வீரர்கள் ஓய்வு பெற்றதும், இந்திய அணிக்கு அவர்களுக்கு மாற்றாக, திறன்மிக்க ஆட்டக்காரர்களை கண்டடைய வேண்டிய அவசியம் இருந்து வந்தது. உள்ளூர் போட்டிகளில் இருந்தும், ஐ.பி.எல் போட்டித் தொடரில் இருந்தும் பல இளைய கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல், சிறிது காலத்திற்குள்ளாகவே அணியில் இருந்து ஓரம் கட்டப்பட, ரோஹித் சர்மா தனது ஆட்டத்தில் ஒரு நிலைவரை கடைப்பிடிக்கும் நிதானத்தாலும், அதன்பிறகு, வெளிப்படுத்தும் அதீதமான அதிரடியாலும் அணியில் தனக்கென தனித்த இடத்தை மிக நெடிய போராட்டத்திற்கு பின்னர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எனினும், அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் காயம் காரணமாக, தொடர்ச்சியாக அவரால் விளையாட முடியாமலானது.