எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனுமதி மறுப்பின் பின்னணி என்ன?

திருநெல்வேலியில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெறவிருந்த "2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விழிப்புணர்வு' கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. டிசம்பர் 7-13 வரை நடைபெறவிருந்த இந்

Updated On :20 செப்டம்பர் 2012, 9:20 am

திருநெல்வேலியில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெறவிருந்த "2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விழிப்புணர்வு' கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

டிசம்பர் 7-13 வரை நடைபெறவிருந்த இந்தக் கூட்டத்தில்ம.தி.மு.க. சார்பில் நாஞ்சில் சம்பத், அதிமுக சார்பில் பழ.கருப்பையா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலத் தலைவர் தா.பாண்டியன், பா.ஜ.க.மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி, டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து இடையூறு போன்ற காரணங்களைக் காட்டி கூட்டத்துக்கு அனுமதி மறுத்தது காவல் துறை. பள்ளி மைதானத்தில் கூட்டம் நடத்த சாஃப்டர் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில், திமுக தலைமைக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரே பள்ளியை நிர்வகிக்கும் மறைமாவட்டம் நிர்வாகத்தை மிரட்டியதாகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மூலம் பள்ளி நிர்வாகம் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காவல் துறை அனுமதி மறுத்ததையடுத்து, வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தின்தலைவரும், அதிமுக பிரமுகருமான கல்லூர் வேலாயுதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடினார். என்ன நெருக்கடியோ தெரியவில்லை, பள்ளி நிர்வாகமும் அனுமதியை ரத்து செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.

இருப்பினும் பொது இடங்களில் கூட்டம் நடத்தலாம் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அதற்கும் காவல் துறையினர் அனுமதி தரவில்லை.

இந்த விவரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டபோது, காவல் துறையினரை நீதிபதி கடிந்து கொண்டதோடு, கூட்டம் நடத்துவது தொடர்பான அனுமதி குறித்த விவரத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடப்பது புதிதல்ல. ஏன் திமுக கூட்டங்களேகூட இங்கு நடைபெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அதிமுக பிரமுகர் கல்லூர் வேலாயுதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.